இலங்கை

யாழில் ஆறு ஆடுகளை திருடிய சந்தேகநபர் கைது!

Published

on

யாழில் ஆறு ஆடுகளை திருடிய சந்தேகநபர் கைது!

மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான ஆறு ஆடுகளை திருடிய இருவர் நேற்றிரவு சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் சாவகச்சேரி – தச்சன் தோப்பு பகுதியில் ஆறு ஆண்டுகள் களவாடப்பட்டு நிலையில் இது குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அந்தவகையில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் நெறிப்படுத்தலின் கீழ், சாவகச்சேரி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினர் இது குறித்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Advertisement

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த வாகனங்களின் தகட்டு இலக்கங்களை பெற்று அதன் மூலம் விசாரணைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் அந்த வாகனம் புத்தள மாவட்ட பதிவில் இருந்தமையும், அந்த வாத்தை துன்னாலை பகுதியைச் சேர்ந்த ஒருவர் வாங்கியமையும் தெரியவந்தது.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் நேற்றிரவு நெல்லியடி – துன்னாலை பகுதியில் வைத்து திருடுவதற்கு பயன்படுத்திய வாகனத்தையும், 5 ஆடுளையும் மீட்டதுடன் இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version