இலங்கை

யாழில் பொன்னாலை காட்டுப்பகுதியில் 240 கிலோகிராம் கஞ்சா மீட்பு

Published

on

யாழில் பொன்னாலை காட்டுப்பகுதியில் 240 கிலோகிராம் கஞ்சா மீட்பு

பொன்னாலை காட்டுப்பகுதியூடாக கஞ்சா கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டு 240 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அத்துடன் மாதகலைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

Advertisement

இன்று சனிக்கிழமை மதியம் இச்சம்பவம் இடம்பெற்றது.

போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அவர்கள் மேற்கொண்ட விசேட கண்காணிப்பின்போது இந்த கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த சில வருடங்களுக்கு முன்னரும் பொன்னாலை இளைஞர்கள் இதேபோன்ற கஞ்சா கடத்தல் ஒன்றை முறியடித்து பெருந்தொகை கஞ்சாவை கைப்பற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version