இலங்கை
யாழில் போதை மாத்திரைகளை விற்ற இளைஞன் கைது !
யாழில் போதை மாத்திரைகளை விற்ற இளைஞன் கைது !
யாழில் 10 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா நடைபெற்ற நிலையில் சந்தேக நபர் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வந்துள்ளதாகவும்
சந்தேகநபர் கொழும்பைச் சேர்ந்த 25 வயதுடையவர் எனவும்
சந்தேகநபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும்
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[ஒ]