இலங்கை

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் திறப்பு!

Published

on

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் திறப்பு!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் இன்றைய தினம்  காலை 8.30  மணிக்கு மாவட்ட செயலகத்தில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தின் இணைப்பாளராக திரு. சுந்தரமூர்த்தி கபிலன் அவர்களுக்கான நியமனக் கடிதம் அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது.

Advertisement

இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்  கருணநாதன் இளங்குமரன், அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், அமைச்சர் அவர்களின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் பங்குபற்றினார்கள்.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version