உலகம்

ரஷ்யாவில் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலி!

Published

on

ரஷ்யாவில் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலி!

ரஷ்யாவின் பிர்யங்ஸ் மாகாணம் கில்முவ் நகரில் இருந்து தலைநகர் மொஸ்கோவுக்கு சனிக்கிழமை இரவு கடுகதி ரயில் நூற்றுக்கணக்கான பயணிகளுடன் புறப்பட்ட நிலையில், பிர்யங்ஸ் மாகாணம் யொஹொனிசி என்ற கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது தண்டவாளத்தின் மேல் அமைக்கப்பட்டிருந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது. குறித்த  மேம்பாலத்தின் இடிபாடுகள், கொங்கிறீட்  கற்கள் தண்டவாளத்தில் விழுந்தன. 

அப்போது, தண்டவாளத்தில் வேகமாக வந்த கடுகதி ரயில் இடிபாடுகள், கொங்கிறீட் கற்கள் மீது மோதியதில் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலில் பயணித்த 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 30 பேர் படுகாயமடைந்தனர்.

Advertisement

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version