இந்தியா

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சந்தைப்படுத்தல் தலைவர் கைது!

Published

on

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சந்தைப்படுத்தல் தலைவர் கைது!

சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பில் பெங்களூர் பொலிஸார் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சந்தைப்படுத்தல் தலைவர் நிகில் சோசலேவை கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் பெங்களூர் சந்தைப்படுத்தல் மற்றும் வருவாய்த் தலைவரான சோசலே, மும்பைக்கு விமானத்தில் சென்றபோது பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இது தவிர வெற்றி கொண்டாட்டங்களின் ஏற்பாட்டாளர்களான ஏனைய மூன்று அதிகாரிகளும் தனித்தனியான சம்பவங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரண், சுமந்த் மற்றும் சுனில் மேத்யூ என அடையாளம் காணப்பட்ட அதிகாரிகளே கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கூட்ட நெரிசல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பெங்களூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூர் அணியின் நிகழ்வு ஏற்பாட்டு நிறுவனம் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஆகியோரும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இதேவேளை, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கச் செயலாளர் மற்றும் பொருளாளர் தப்பி ஓடிவிட்டதாகக் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version