இலங்கை

வானிலை அறிவித்தல்-மக்களுக்கான எச்சரிக்கை!

Published

on

வானிலை அறிவித்தல்-மக்களுக்கான எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இன்றைய நாளுக்கான புதுப்பிக்கப்பட்ட வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டு, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. அளவுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும்

Advertisement

வடக்கு மாகாணத்திலும் அநுராதபுர மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வட-மத்திய, மேற்கு, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ.வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் 

பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

அடுத்த 24 மணி நேரத்திற்கு இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் தொடர்பான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டு, புத்தளம் முதல் கொழும்பு, காலி வழியாக அம்பாந்தோட்டை வரையிலான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடல் பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும்  

காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும் எனவும், சிலாபம் முதல் புத்தளம், மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 35-45 கி.மீ.அளவில் இருக்கும், ஆனால் அவ்வப்போது மணிக்கு 60-70 கி.மீ. வரை அதிகரிக்கலாம் எனவும் 

இலங்கையைச் சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ.அளவில் இருக்கும். 

Advertisement

இதனால் பொதுமக்கள் வானிலை மையத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை கவனமாக பின்பற்றி, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்குதல்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version