இலங்கை

வானிலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

Published

on

வானிலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

கடற்பரப்புகளில் காற்று மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசலாம் என  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சிலாபம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் காலி தொடக்கம் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகளில்   காற்றின் வேகம் அதிகரிக்கலாம் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும், குறித்த பகுதிகளில் 2.5 முதல் 3 மீற்றர் வரையில் கடலலை மேலெழக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம்தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மழையுடனான வானிலை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாகவும், வானிலை முன்னறிவிப்புகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version