இந்தியா

விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் மரணம்

Published

on

விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் மரணம்

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே வடகரையில் ராஜா சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசு தாயாரித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்தில் 3பேர் உயிரிழந்தனர். மேலும் 3பேர் படுகாயமடைந்தனர்.

Advertisement

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்த வெடி விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலையின் மேற்பார்வையாளர், போர்மேன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version