விளையாட்டு

147 கி.மீ வேகம்… கவனம் ஈர்க்கும் 17 வயது தமிழக வீரர்: யார் இந்த பிரணவ் ராகவேந்திரா?

Published

on

147 கி.மீ வேகம்… கவனம் ஈர்க்கும் 17 வயது தமிழக வீரர்: யார் இந்த பிரணவ் ராகவேந்திரா?

தமிழ்நாடு எப்போதும் தரமான கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இங்கிருந்து தேசிய அணியில் இடம் பிடித்த பல வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தடம் பதித்துள்ளார்கள். அந்த வகையில், தனது தரமான வேகப்பந்து வீச்சு மூலம் தடம் பதிக்க தயாராகி வருகிறார் ஆர்.டி. பிரணவ் ராகவேந்திரா. தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்த 17 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஆர்.டி. பிரணவ் ராகவேந்திரா பி.சி.சி.ஐ-யின் பெங்களூரு சிறப்பு மையத்தில் 147.3 கி.மீ வேகத்தில் பந்து வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த மாத இறுதியில் இந்தியாவின் யு-19 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் இவர், பந்தை 147.3 கிமீ வேகத்தில் வீசி, எந்த இந்திய யு-19 கிரிக்கெட் வீரரும் எட்டிய வேகத்தை எட்டி சாதனை படைத்திருக்கிறார். யார் இந்த பிரணவ் ராகவேந்திரா? பிரணவ் ராகவேந்திரா, தான் ஒரு ஓட்டப்பந்தய வீரராக இருக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். அவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 13.76 மீட்டர் தூரம் கடந்து அசத்தி இருந்தார். ஆனால், மருத்துவர் ஒருவரின் பரிந்துரையின் பேரில்தான் கிரிக்கெட் பக்கம் தனது கவனத்தை அவர் திருப்பியதாக பிரணவ்வின் தந்தை ராஜேந்திரன் கூறியுள்ளார். பிரணவ்வுக்கு தம்பி பிறந்த பிறகு, அவர் திசைதிருப்பப்பட்டதாக அவருக்கு தோன்றியுள்ளது. அனைவரின் கவனமும் அவரது தம்பியின் பக்கம் திரும்புவதாகவும், தான் தனிமையில் விடப்பட்டதாகவும் அவர் உணர்ந்துள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் இதையடுத்து, அவரை அவரது தந்தை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மருத்துவர் பிரணவ் எப்போதும் அவருக்கு துணையாக இருக்கும் வகையில் அவரை ஒரு குழு விளையாட்டில் சேர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால், அவரை ஓட்டப்பந்தயத்தில் இருந்து கிரிக்கெட்டுக்கு மாற்றியதாக அவரது தந்தை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டுக்கு மாறியதில் இருந்து பிரணவ் முடிந்தவரை பந்துகளை வேகமாக வீச முயன்றுள்ளார். “எனக்கு வேகம் ரொம்பப் பிடிக்கும், வேகமாகப் பந்து வீசவும் ஆசை. பவுன்சர்களால் பேட்ஸ்மேன்களைப் பயமுறுத்தி, சரியான லைனில் வீச வேண்டும். அப்படி பந்துவீசம் போது அது எப்போதும் நன்றாக இருக்கும். அதைத் தொடர்ந்து செய்ய, துல்லியம் உட்பட பல அம்சங்களில் நான் வேலை செய்ய வேண்டும். அதனால்தான் நான் வேகக் கண்காணிப்பு கருவியை அதிகம் பொருட்படுத்துவது இல்லை. வேகமாக பந்து வீச, உடற்தகுதி எனது முதன்மையான முன்னுரிமையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும், அதற்காக, சரியான விஷயங்களைச் செய்வதன் மூலம் நான் என்னை கவனித்துக் கொள்ள வேண்டும். அது திறன் பயிற்சி அல்லது உடற்பயிற்சி பயிற்சிகள் அல்லது மீட்பு. அடுத்த ஆண்டு யு-19 உலகக் கோப்பை மற்றும் அதற்குப் பிறகு நான் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமானால் அனைத்தையும் சரியாக செய்திடல் வேண்டும்” என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகிறார்.கடந்த ஆண்டு, பிரணவ்-வுக்கு 16 வயதாக இருந்தபோது, ​​வேகப் பந்து ஜாம்பவான் வீரரான ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் எம்.ஆர்.எஃப் பேஸ் பவுண்டேஷனில் முகாமை மேற்பார்வையிட்டார். அப்போது, ​​பிரணவ் மணிக்கு 139 கிமீ வேகத்தைத் தொட்டுள்ளார். இன்னும் சில நாட்களில், அவரது வேகம் 150 கி.மீ-யைத் தாண்டும் என்றும் எம்.ஆர்.எஃப் பேஸ் அறக்கட்டளையின் தலைமை பயிற்சியாளர் எம். செந்தில்நாதன் கூறியிருக்கிறார். பிரணவ் பற்றி செந்தில்நாதன் பேசுகையில், “பேஸ் எப்போதும் அவரது பலமாக இருந்து வருகிறது. நான் அவரை முதன்முதலில் பார்த்தபோது, ​​அவர் 130 கிமீ வேகத்தில் பந்து வீசினார், ஆனால் இப்போது, ​​வெறும் இரண்டு ஆண்டுகளில், அவர் தொடர்ந்து மணிக்கு 135-145 கிமீ வேகத்தில் பந்து வீசி வருகிறார். வேகம் அவருக்கு இயல்பாகவே வருகிறது, தற்போது, ​​அது கட்டுப்பாட்டைப் பெறுவது பற்றியது. அவர் இன்னும் வளர்ச்சி நிலையில் இருக்கிறார், எனவே அவர் வேகத்தில் சில கூடுதல் கவனத்தைச் சேர்க்கலாம். ஆனால் அவரது வயதுடைய ஒரு பையனுக்கு, அவர் ஏற்கனவே மிக வேகமாக இருக்கிறார். நாம் அவரை வளர்த்து பாதுகாக்க வேண்டும். வேகம் ஒரு ஆவேசமாக மாறக்கூடாது, ஏனென்றால் கட்டுப்பாடுதான் முக்கியம். நல்ல விஷயம் என்னவென்றால், அவர் அதைப் புரிந்துகொள்கிறார்” என்று அவர் கூறியுள்ளார். பிரணவ்-வின் உடற்தகுதியை மேற்பார்வையிடும் ராம்ஜி ஸ்ரீனிவாசன் பேசுகையில், “பிரணவ் நிச்சயமாக எதிர்காலத்திற்கான ஒரு திறமைசாலி, ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர் தனது திறனை அதிகப்படுத்தும் வகையில் அவரைப் பாதுகாத்து பேணி காக்க வேண்டும். ஆஸ்திரேலியா பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக எப்படி கடினப்பட்டார் என்பதைப் பார்த்தோம். அதேபோல், அவர் சரியான நேரத்தில் உச்சத்தை அடைய ஒரு நீண்டகால தடகள மேம்பாட்டுத் திட்டத்தை நாங்கள் வகுத்துள்ளோம். நீங்கள் அவ்வளவு வேகமாக பந்து வீசினால், அவருக்கு ஒரு வலுவான அடித்தளம் இருக்க வேண்டும். அவர் வளர்ச்சி நிலையில் இருக்கிறார், எனவே மையத்தை கட்டமைக்க வேண்டும். அவருக்கு அதிகாரம் அளிக்கும் அடித்தளம் உட்பட அனைத்தும் உருவாக்கப்பட வேண்டும். பந்து வீசுவதன் இயக்கவியல் அவரது தேவைக்கேற்ப உருவாக்கப்பட வேண்டும். விரிவான உணவுத் திட்டம் மற்றும் மீட்புத் திட்டம் அவர் வளர உதவும். அவர் வயது வந்தவராக வளர நாம் பொறுமை காட்ட வேண்டும். இளம் விளையாட்டு வீரர்கள் முடிக்கப்பட்ட தயாரிப்புகள் அல்ல. மற்றவர்களுடன் செய்த அதே தவறுகளை நாம் மீண்டும் செய்யக்கூடாது.” என்று அவர் கூறியுள்ளார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version