இலங்கை
20ஆம் திகதி திறக்கவுள்ள கதிர்காம காட்டுப்பாதை!
20ஆம் திகதி திறக்கவுள்ள கதிர்காம காட்டுப்பாதை!
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்கு செல்லும் பாதை யாத்ரீகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 20ஆம் திகதி திறக்கப்பட்டு, மீண்டும் ஜூலை மாதம் 04ம் திகதி மூடப்படும் என, அம்பாறை மாவட்ட மாவட்ட செயலர் சிந்தக்க அபேவிக்கிரம தெரிவித்துள்ளார்.
கதிர்காமம் மற்றும் உகந்தமலை முருகன் ஆலயங்களின் வருடாந்த ஆடிவேல் விழா 26ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை மாதம் 11ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும் எனவும் கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாக செல்வோர் உகந்தமலை முருகன் ஆலயத்தில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து குமண யால காட்டினூடாக பிரவேசித்து கதிர்காமத்தை சென்றடைவது வழக்கமாகும்.
ஆதன்படி, 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை உகந்தமலை முருகன் ஆலயத்தில் நடைபெற இருக்கும் ஆரம்ப வைபவத்தை அடுத்து காட்டுப்பாதை காலை ஆறு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை மாத்திரமே திறந்து இருக்குமெனவும் அக் காலப்பகுதிக்குள் மட்டுமே காட்டுக்குள் செல்ல யாத்திரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.