விளையாட்டு

5.29 மணி நேரம் அரங்கேறிய ஆட்டம்… பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டத்தை வாகை சூடிய கார்லோஸ் அல்காரஸ்!

Published

on

5.29 மணி நேரம் அரங்கேறிய ஆட்டம்… பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டத்தை வாகை சூடிய கார்லோஸ் அல்காரஸ்!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் மற்றும் இத்தாலியின் ஜானிக் சின்னர் ஆகியோர் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், அல்காரஸ் போராடி சாம்பியன் பட்டத்தை வென்றார்.ஆட்டத்தின் தொடக்கத்தில், ஜானிக் சின்னர் சிறப்பாக விளையாடி முதல் இரண்டு செட்களையும் 6-4, 7-6 (7-4) என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார். சின்னர் ஆதிக்கம் செலுத்தியதால், அல்காரஸ் சற்று பின்தங்கினார்.எனினும், சின்னர் கொடுத்த பதிலடிக்கு அல்காரஸ் அசரவில்லை. தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்காரஸ், அடுத்த இரண்டு செட்களையும் 6-4, 7-6 (7-3) என்ற புள்ளிக்கணக்கில் வென்று, ஆட்டத்தை சமன் செய்தார். இதனால் போட்டி மேலும் பரபரப்பானது.வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் இறுதி செட் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இந்த செட்டை 7-6 (10-2) என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய அல்காரஸ், பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டார். இந்த இறுதிப் போட்டி சுமார் ஐந்தரை மணி நேரம் நீடித்தது.குறிப்பிடத்தக்கது என்னவென்றால், கடந்த ஆண்டும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் கார்லோஸ் அல்காரஸ் தான் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இது அவருக்கு தொடர்ச்சியாக இரண்டாவது பிரெஞ்சு ஓபன் பட்டமாகும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version