இலங்கை

பசுவுடன் விளையாடிய சிறுவனுக்கு காத்திருந்த ஆபத்து ; சோகத்தில் தவிக்கும் குடும்பம்

Published

on

பசுவுடன் விளையாடிய சிறுவனுக்கு காத்திருந்த ஆபத்து ; சோகத்தில் தவிக்கும் குடும்பம்

பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் ஒருவன் நேற்று (14) உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அனுராதபுரத்தில் 4 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுவனே நேற்று முன்தினம் (13) மாலை இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தை சந்தித்துள்ளான்.

Advertisement

சிறுவன் வேறு சில நண்பர்களுடன் பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு பசுவுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​குழப்பமடைந்த பசு அங்கிருந்து வீதியில் ஓடியுள்ளது.

அங்கு, துரதிர்ஷ்டவசமாக குறித்த சிறுவனும் பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி, கிட்டத்தட்ட 900 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, பலத்த காயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.

இருப்பினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிறுவன் நேற்று மதியம் உயிரிழந்துள்ளான்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version