இந்தியா

புனே அருகே பாலம் இடிந்து விழுந்து விபத்து; பலர் ஆற்று நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அச்சம்

Published

on

புனே அருகே பாலம் இடிந்து விழுந்து விபத்து; பலர் ஆற்று நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அச்சம்

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புனேவில் உள்ள தலேகான் தபாதே அருகே இந்திராயானி ஆற்றின் மீது பாலம் இடிந்து விழுந்ததில் பலர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது, மேலும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்பிம்ப்ரி சின்ச்வாட் காவல்துறை ஒரு செய்திக்குறிப்பில், இந்த சம்பவத்தில் 10-15 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது, ஏற்கனவே ஐந்து முதல் ஆறு பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்திய மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி விட்டல் பன்ஹோட், மீட்புப் பணிக்காக தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாகக் கூறினார். தீயணைப்புத் துறையின் மீட்புப் படகுகள் மற்றும் வேன்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version