இலங்கை

அணு ஆயுதப் பரவல் தடுப்பு ; ஈரான் எடுக்கும் முடிவால் உலகிற்கு பேராபத்து!

Published

on

அணு ஆயுதப் பரவல் தடுப்பு ; ஈரான் எடுக்கும் முடிவால் உலகிற்கு பேராபத்து!

 அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேற வேண்டும் என்று, ஈரான் நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் அவ்வாறு நடந்தால், சர்வதேச அளவில் அணு ஆயுத போர் வெடிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

எனினும் ஈரான் அணு ஆயுதம் நோக்கி போகக்கூடாது என்றுதான் தாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்கா கூறி வருகிறது.

Advertisement

இஸ்ரேலின் செயல்பாடுகள், ஈரானை அணு ஆயுதங்களை நோக்கி வேகமாக தள்ளியுள்ளது.

இது குறித்து ஈரானின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் செய்தித் தொடர்பாளர், இப்ராஹிம் ரெஸாய் கூறுகையில்,

அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (NPT) இருந்து விலகுவது குறித்து நாங்கள் பரிசீலனை செய்து வருகிறோம்.

Advertisement

நாடாளுமன்றத்தில் இது தொடர்பான மசோதா விவாதத்தில் இருக்கிறது. ஈரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) ஆளுநர்கள் குழு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நாங்கள் இதை செய்து வருகிறோம்  என்று தெரிவித்திருக்கிறார்.

யுரேனியத்தின் தடயங்கள் கடந்த 20 ஆண்டுகளில் ‘சர்வதேச அணுசக்தி முகமை’ ஒரு நாட்டின் மீது இப்படியான குற்றச்சாட்டுகளை வைப்பது இதுவே முதல் முறையாகும்.

அதாவது, “NPT ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் தனது பாதுகாப்பை உறுதி செய்வதில் பல முறை தவறியிருக்கிறது. மட்டுமல்லாது ஈரானில் பல இடங்களில் யுரேனியத்தின் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து அந்நாடு நம்பகமான விளக்கங்களை அளிக்கத் தவறிவிட்டது.

Advertisement

கடந்த 2019 முதல், ஈரான் தனது அணுசக்தி திட்டங்களில் வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்கவில்லை. எனவே, அந்நாட்டின் அணுசக்தி பயன்பாடு, அமைதிக்கானது என்பதை எங்களால் உறுதி செய்ய முடியவில்லை.

அணுசக்தி விஷயங்களில் உடனடியாக, முழு அளவில எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும். ஒருவேளை அப்படி செய்ய தவறினால், இந்த விஷயத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்குப் பரிந்துரைக்க நேரிடும் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒரு நாட்டின் மீது IAEA இப்படியான கறார் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது கடந்த 20 ஆண்டுகளில் இதுதான் முதல்முறை. இது ஈரானுக்கு கவுரவ பிரச்சனையாக மாறியிருக்கிறது.

Advertisement

எனவேதான் ஈரான் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்திலிருந்து விலகும் முடிவை எடுத்திருக்கிறது. இது மட்டும் நடந்தால் ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதை யாராலும் தடுக்க முடியாது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அதேவேளை ஈரான் அணு ஆயுதம் உருவாக்கினால், மத்திய கிழக்கில் உள்ள சவுதி அரேபியா, துருக்கி, எகிப்து போன்ற மற்ற நாடுகளும் தங்கள் பாதுகாப்பிற்காக அணு ஆயுதம் தயாரிக்க தொடங்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.    

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version