இலங்கை

இலங்கை வந்தடைந்தார் கீதா கோபிநாத்

Published

on

இலங்கை வந்தடைந்தார் கீதா கோபிநாத்

சர்வதேச நாணய நிதியத்தின் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.

2005ஆம் ஆண்டின் பின்னர் சர்வதேச நாணயநிதியத்தின் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும். இலங்கை விஜயத்தின்போது கீதா கோபிநாத், நிதியமைச்சு மத்தியவங்கி, சர்வதேச நாணயநிதியம் ஆகியவை இணைந்து நடத்தும் மீட்சிக்கான இலங்கையின் பாதை படுகடன் மற்றும் ஆளுகை என்ற மாநாட்டில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.

Advertisement

மேலும் இலங்கை அதிகாரிகளுடனும், இலங்கை சர்வதேச நாணயநிதியம் ஆகியவற்றுக்கு இடையிலான ஈடுபாட்டுடன் தொடர்புபட்டவர்களுடனும் கீதா கோபிநாத் பேச்சுகளை மேற்கொள்ளவுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version