உலகம்
ஈரான் தாக்குதலில் சிக்கி இலங்கை இளைஞன் காயம்!
ஈரான் தாக்குதலில் சிக்கி இலங்கை இளைஞன் காயம்!
இஸ்ரேலின் பினீ பிராக் பகுதியில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் சிக்கி இலங்கை இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இலங்கை இளைஞரே காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே இவ்வாறு இரண்டு இலங்கை பெண்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.
இஸ்ரேலின் வலிந்த தாக்குதலையடுத்து ஈரான் நடத்திவரும் தாக்குதல்களால் இஸ்ரேலின் பல பகுதிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.[ஒ]