இலங்கை

ஒரே நாளில் 485 பேர் கைது ; சோதனையில் மீட்கப்பட்ட ஆபத்தான பொருட்கள்

Published

on

ஒரே நாளில் 485 பேர் கைது ; சோதனையில் மீட்கப்பட்ட ஆபத்தான பொருட்கள்

நாடளாவிய ரீதியில் நேற்று  (15) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 485 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 141 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 163 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 165 பேரும் கஞ்சா செடிகளுடன் 04 பேரும், போதை மாத்திரைகளுடன் 12 பேரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 241 கிராம் 616 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 590 கிராம் 345 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 192 கிலோ 807 கிராம் 106 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 1938 கஞ்சா செடிகளும், 1324 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version