இலங்கை
ஜீரணக்கோளாறுகள் வராம இருக்க அத்திப்பழம் எப்படி சாப்பிடணும் தெரியுமா?
ஜீரணக்கோளாறுகள் வராம இருக்க அத்திப்பழம் எப்படி சாப்பிடணும் தெரியுமா?
அத்திப்பழத்தில் இருக்கும் அதிக நார்ச்சத்து காரணமாக இது வயிறு மற்றும் செரிமானத்திற்கு சிறந்தது. உணவு செரிமானம் சீராக இருப்பதால் உடல் சத்துக்களை உறிஞ்சு கழிவுகளை வெளியேற்றும் பணியை திறம்பட செய்கிறது.
இது எளிதான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது, மலச்சிக்கலை உங்கள் உடலில் இருந்து விலக்கி வைக்கிறது.
ஃப்ரெஷ்ஷான அத்திப்பழத்தை பச்சையாகவோஅல்லது சமைத்தோ சாப்பிடலாம்.
உலர வைத்த அத்திப்பழம் அத்திப்பழத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அத்திப்பழத்தை ஜூஸ், சாலட் மற்றும் இனிப்பு வகைகளில் சேர்த்து சாப்பிடலாம்.
உலர்ந்த அத்திப்பழம் வயிற்றுக்கு நல்லது. இதில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பின் அளவை பராமரிக்க உதவுகிறது. இதனால் உணவு எளிதில் செரிமானம் ஆகிறது. இது மலச்சிக்கல் பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது.
அத்திப்பழத்தை பச்சையாகவும் சாப்பிடலாம். இனிப்பு மற்றும் இனிப்பு பண்டங்களுக்கு பதிலாக இந்த ஆரோக்கியமான பழத்தை சாப்பிடலாம். இதில் கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உங்களை பாதுகாக்கும். வயிற்றுப்புண்ணுக்கு அருமருந்தாக இருக்கும்.
அத்திப்பழ கஷாயம் என்பது ஆரோக்கியமான மற்றும் இனிப்பான திரவ வடிவிலான அத்திப்பழ சாறு ஆகும். இது வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது அதிசயங்களைச் செய்கிறது. இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.
1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து 2 உலர்ந்த அத்திப்பழங்களை சேர்த்து, அத்திப்பழம் மென்மையாகும் வரை கொதிக்க வைக்கவும். பிறகு, அந்த வேகவைத்த அத்திப்பழத்துடன் நீரை குடிக்கவும். மலச்சிக்கல், செரிமான பிரச்சனை இருப்பவர்கள் தினமும் குடிக்க ஆரம்பித்தால் மாற்றங்கள் உணர்வீர்கள்.
அத்திப்பழம் செரிமான மண்டலத்திற்கு நன்மை பயக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கிறது.
அத்திப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
அத்திப்பழத்தில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.
அத்திப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது.
அத்திப்பழத்தில் உள்ள வைட்டமின்கள் ஏ மற்றும் பி உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
ஃப்ரெஷ்ஷாக கிடைக்கும் அத்திப்பிஞ்சு, அத்திப்பழம், உலர் அத்திப்பழம் என எதுவாக இருந்தாலும் அவை தரமானதா என்பதை கவனியுங்கள்,
சிலருக்கு அத்திப்பழம் எப்படி சாப்பிட்டாலும் ஒத்துகொள்ளாது. அவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துகொள்ள வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் உலர் அத்திப்பழம் சாப்பிடும் போது இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். மருத்துவரின் ஆலோசனையின்றி எடுக்க வேண்டாம்.
அத்திப்பழம் நன்மையே என்றாலும் தினமும் 1 அல்லது 2 உலர் அத்திக்கு மேல் எடுக்க வேண்டாம். ஃப்ரெஷ்ஷான பழங்கள் என்றால் 5 வரை எடுத்துகொள்ளலாம். அளவுக்கு மீறி எடுக்க வேண்டாம்.