இலங்கை

தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் ; ஈரானை மிரட்டும் ட்ரம்ப்!

Published

on

தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் ; ஈரானை மிரட்டும் ட்ரம்ப்!

இஸ்ரேலில் உள்ள எந்த அமெரிக்க இலக்குகளையும் ஈரான் தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மோதலை எளிதாக முடிவுக்குக் கொண்டுவருவது ஈரானின் கைகளில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Advertisement

இந்நிலையில் இஸ்ரேலின் தாக்குதலை ட்ரம்ப் பாராட்டியுள்ள நிலையில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

டிரம்ப் நிர்வாகம் ஈரான் மீதான இஸ்ரேலின் நடவடிக்கையிலிருந்து இதுவரை விலகியே உள்ளது. இஸ்ரேலின் தாக்குதலை ஆதரித்தாலும் நாங்கள் இந்த தாக்குதலுக்கு உதவவில்லை என்றே அமெரிக்கா கூறி வருகிறது.

இஸ்ரேலின் இந்த தாக்குதலில் அமெரிக்காவின் ஈடுபாடு அல்லது உதவி எதுவும் இல்லை என்று அமெரிக்கா உறுதியாக கூறி உள்ளது.

Advertisement

இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்காவை அதிகாரபூர்வமாக போருக்கு அழைத்து உள்ளது இஸ்ரேல்.

ஈரான் மீதான தாக்குதலில் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று இஸ்ரேல் அமெரிக்காவிற்கு அதிகாரபூர்வ கோரிக்கை விடுத்துள்ளது.

இதில் அமெரிக்கா உதவி செய்யும் பட்சத்தில் அது உலகப்போராக வெடிக்கும் அபாயங்கள் உள்ளன.

Advertisement

இதற்கிடையே இஸ்ரேல் தாக்குதலுக்கு அமெரிக்கா மறைமுக ஆதரவை வழங்கி வருகிறது என்று உறுதியாக நம்புகிற அமெரிக்க தளங்களும் எதிர்வரும் நாட்களில் குறிவிக்கப்பட்டு தாக்குதல் விரிவாக்கப்படும் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் தான், ஈரான் அமெரிக்காவை எந்த வகையிலும் தாக்கினால், அது “இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு” அமெரிக்க இராணுவத்தின் வலிமையை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் மீதான தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், “ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தத்தை எளிதாகச் செய்து, இந்த இரத்தக்களரி மோதலை முடிவுக்குக் கொண்டுவர முடியும்” என்றும் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version