இலங்கை

நாடு கடத்தலை தொடங்கிய ஜெர்மனி; அச்சத்தில் இலங்கையர்கள்!

Published

on

நாடு கடத்தலை தொடங்கிய ஜெர்மனி; அச்சத்தில் இலங்கையர்கள்!

  ஜெர்மனியில் இருந்த தாம் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சத்தில் பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜெர்மனியில் அதிகாரிகள் குடும்பங்கள் உட்பட மக்களை நாடு கடத்துவது அதிகரித்து வரும் நிலையில் அங்கு விதிவிட இல்லாது தங்கியுள்ள இலங்கையர்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

இந்நிலையில் நாடு கடத்தலை எதிர்ச்சி பிராங்பேர்ட்டில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.

இந்நிலையில் உயர்நிலைப் கல்லூரியில் பட்டம் பெறவிருந்த 16 வயது மாணவன் உள்ளிட்ட ஆப்கானிஸ்தானை சேர்ந்த, கே.ஃபிராங்க்ஃபர்ட் என்ற நபரின் சீக்கிய குடும்பத்தினர் இந்தியாவுக்குநாடுகடத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குழந்தைகளைக் கூட பாதிக்கும் கடுமையான நாடுகடத்தல் நடைமுறைக்கு இந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

Advertisement

புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து, ஜெர்மனி புகலிடக் கொள்கையில் தனிமைப்படுத்தலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது.

மேலும், சாத்தியமான இடங்களில் ஆப்கானிஸ்தான் அல்லது சிரியா உட்பட, உள்நாட்டுப் போர் அகதிகளுக்கான குடும்ப மறு ஒருங்கிணைப்பைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதேவேளை ஜேர்மனியில் இருந்து நாடுகடத்தப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது, 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், 6,151 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version