இலங்கை
நாட்டின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும்!
நாட்டின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும்!
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான மிதமான பலத்த மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
பலத்த காற்றினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை ஆய்வுத் துறை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை