இலங்கை

மருந்துகளுக்குத் தட்டுப்பாடு தீர்வு எட்டப்படவேண்டும்! எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்து

Published

on

மருந்துகளுக்குத் தட்டுப்பாடு தீர்வு எட்டப்படவேண்டும்! எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்து

இலவச சுகாதாரம் என்பது மக்களினது மனித உரிமையாகும். எனினும் எமது நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் 180க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு இவ்வாறு தட்டுப்பாடு காணப்படுகின்றது. இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு வழங்க வேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;  சத்திரசிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது.புற்றுநோய் நோயாளிகள், இதய நோயாளிகள்,உயர் இரத்த அழுத்த நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் மருந்துகளுக்கும். வலி நிவா ரணிகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கும் கடு மையான தட்டுப்பாடு நிலவுகின் றது.
மருந்துத் தட்டுப்பாட்டுக்கு ஒரு தீர்வை வழங்காமல், மக்களின் இந்த அடிப்படை உரிமையையும்  அரசாங்கம் மீறி வருகின்றது. அரசாங்கம் எந்தத் தீர்வையும் வழங்காத ஒரு கொள்கையையே பின்பற்றிவருகிறது. இந்த மருந்துப் பிரச்சினைக்கு அவசரத் தீர்வை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். மக்களின் உயிர் வாழ்வை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் – என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version