இலங்கை

யாழில் கைதான இரு இளைஞர்கள் ; சோதனையில் சிக்கிய பொருட்களால் அதிர்ச்சி

Published

on

யாழில் கைதான இரு இளைஞர்கள் ; சோதனையில் சிக்கிய பொருட்களால் அதிர்ச்சி

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில் வைத்து அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதுடைய இரண்டு இளைஞர்கள் இவ்வாறு ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஒருவரிடமிருந்து 50 கிராம் ஹெரோயினும், மற்றையவரிடமிருந்து 1000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version