இலங்கை

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

Published

on

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

50 கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் நேற்றுமாலை கைது செய்துள்ளனர். 

இதுகுறித்து தெரியவருவதாவது; சுன்னாகம் பொலிஸ் பிரிவில் கடந்த வாரம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை நீதிமன்ற அனுமதியுடன் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைமேற்கொள்ளப்பட்டது.

Advertisement

இந்த நிலையில் விசாரணைகளின் பிரகாரம் கந்தரோடையில் 25 வயதான ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து சோதனையிட்ட பொழுது 50 கிராம் ஹெரோயின் மற்றும் 1 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்தனர் .

இதனையடுத்து குறித்த நபருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version