சினிமா

அந்த மாதிரி நெருக்கமான காட்சியில் நடிக்கும் போது.. மது வேதனை

Published

on

அந்த மாதிரி நெருக்கமான காட்சியில் நடிக்கும் போது.. மது வேதனை

தமிழ் சினிமாவில் ஒரு ஹிட் படம் கொடுத்தால் அந்த நாயகியை ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். அப்படி ரோஜா, ஜென்டில்மேன் போன்ற படங்களில் நடித்து மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் நடிகை மதுபாலா.தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வந்தவர் பீக்கில் இருந்த போதே திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார், இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.கொஞ்சம் கேப் பிறகு மீண்டும் பிஸியாக நடித்து வருகிறார். தெலுங்கில் அடுத்து கண்ணப்பா என்ற படம் வெளியாகவுள்ளது, இதில் மதுபாலா நடித்துள்ளார்.இப்பட நிகழ்ச்சியில் பேசும்போது, நெருக்கமான காட்சிகளில் நடிப்பது எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அதனால் பல சினிமா வாய்ப்புகளை நிராகரித்து விட்டேன். ஒரு படத்தில் என்னிடம் முன்கூட்டியே சொல்லாமல் முத்தக் காட்சியில் நடிக்க சொன்னார்கள்.அதுவும் உதடு முத்தக் காட்சியில் நடிப்பதற்கு என்னிடம் அதிக நேரம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த காட்சியில் நடிக்கும் போது மிகவும் வேதனையான அனுபவமாக இருந்தது என கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version