இலங்கை

இரு மாதங்களின் பின்னரே வாகன இலக்கத்தகடுகள்!

Published

on

இரு மாதங்களின் பின்னரே வாகன இலக்கத்தகடுகள்!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தகவல்

புதிய வாகன உரிமையாளர்களுக்கு இலக்கத்தகடுகளை வழங்குவதில் இரண்டு மாத கால தாமதம் ஏற்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய விநியோகத்தரிடம் இலக்கத் தகடுகளுக்கான கொள்முதல் கோரிக்கையை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளதால் இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இரண்டு மாதங்களுக்குள் இந்த செயல்முறை நிறைவடையும். அதன்பின்னர் இலக்கத்தகடு வழங்கல் மீண்டும் ஆரம்பிக்கும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதுவரை, புதிய வாகன உரிமையாளர்களின் பதிவு விவரங்களை உறுதிப்படுத்தும் அச்சிடப்பட்ட காகித எண்தகடுகள் மற்றும் கடிதத்தை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வழங்கும். இது தொடர்பாகப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version