இலங்கை

ஐ.எம்.எப். உதவிகளைப் பெறாத நிலைமையை ஏற்படுத்துவோம்; ஜனாதிபதி அநுர தெரிவிப்பு!

Published

on

ஐ.எம்.எப். உதவிகளைப் பெறாத நிலைமையை ஏற்படுத்துவோம்; ஜனாதிபதி அநுர தெரிவிப்பு!

இலங்கை தற்போது பெற்றுக்கொள்ளும் சர்வதேச நாணயநிதியத்தின் நீடிக்கபட்டபோது வசதித்திட்டத்தை, சவதேச நாணய நிதியத்துடன் இவ்வாறான ஒரு திட்டத்தில் ஈடுபடும் கடைசிச் சந்தர்ப்பமாக மாற்ற விரும்புகின்றேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணயநிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத்தின் பங்கேற்புடன் நேற்றுக்காலை கொழும்பில் நடைபெற்ற விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

2028ஆம் ஆண்டுக்குள் கடன்களை அடைப்பதற்குத் தேவையான பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை உருவாக்கமுடியும் என்று இலங்கை நம்புகின்றது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத்துக்கும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையே நேற்றுக் கொழும்பில் சந்திப்பொன்று நடை பெற்றுள்ளது. இது தொடர்பில் கலாநிதி கீதா கோபிநாத் தனது
எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “பொருளாதார சீர்த்திருங்களில் இலங்கையின் வலுவான செயற்றிறன் மற்றும் உத்வேகத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் தொடர்பாக ஜனாதிபதி அநுரவுடன் கலந்துரையாடினேன். இந்தச் சீர்திருத்தங்களுக்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு அனைத்து இலங்கையர்களுக்கும் நீடித்த நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்கு இன்றியமையாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version