இலங்கை

காருடன் சிக்கிய ஐஸ்; ஓட்டுநர் தப்பியோட்டம்

Published

on

காருடன் சிக்கிய ஐஸ்; ஓட்டுநர் தப்பியோட்டம்

சொகுசு காரில் இருந்து, ரூ.40 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக கொழும்பு கடலோர பொலிஸ் தெரிவித்துள்ளது.

நேற்று (16) இரவு , காருடன் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்து.

Advertisement

காரில் இருந்து நான்கு பிளாஸ்டிக் பெட்டிகளில் அடைக்கப்பட்ட 4 கிலோ 112 கிராம் ஐஸ் போதைப்பொருள், பொலிஸார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்புன் கடலோர பொலிஸ் பிரிவில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள், வேகமாக வந்த காரை நிறுத்துமாறு சமிக்ஞை காட்டியதால், கார் நிறுத்தாமல் சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸார் காரைத் துரத்திச் சென்று, புறக்கோட்டை வீதியில் உள்ள முகுடு மாவத்தையில் நிறுத்திபொது ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

Advertisement

இந்நிலையில் ஓட்டுநர் உரிமம் சரிபார்க்கப்பட்டபோது, தப்பியோடிய ஓட்டுநர் ஹோமாகம, பிடிபன வடக்கில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version