இலங்கை

கோப்பாய் கொலைச் சம்பவம் சந்தேகநபர்களுக்கு மறியல்

Published

on

Loading

கோப்பாய் கொலைச் சம்பவம் சந்தேகநபர்களுக்கு மறியல்

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்பத்தலைவர் ஒருவரை வாளால் வெட்டிப் படுகொலைசெய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்திருந்தது. வாள்வெட்டுக்கு இலக்கான ச.துஷ்யந்தன் (வயது-43) என்ற குடும்பத் தலைவர் யாழ்ப்பாணம்
போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் 25 மற்றும் 26 வயதுடைய சந்தேகநபர்களைக் கைது செய்தனர். சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்ட போது, சந்தேகநபர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பதில் நீதிவான் உத்தரவிட்டதுடன், அடையாள அணிவகுப்பு நடத்தவும் உத்தரவிட்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version