இலங்கை

தமிழர் பகுதியில் நேர்ந்த கோர விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த வைத்தியர்

Published

on

தமிழர் பகுதியில் நேர்ந்த கோர விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த வைத்தியர்

திருகோணமலையின் தங்கநகர் பகுதியில் இன்று (17) இரவு இடம்பெற்ற விபத்தில் சேருவில வைத்தியசாலையின் வைத்தியர் கெல்வின் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழ் பொதுமக்கள் பலருடைய உயிரை காப்பாற்றிய வைத்தியர் கெல்வின் அவர்களே இன்று (17) இரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.

Advertisement

தன்னுடைய மனைவி பிள்ளைகளை இரத்தினபுரியில் இருந்து பிரிந்து 1990 ம் ஆண்டு முதல் அவர் திருமலையில் பணியாற்றிவருகின்றார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து தனது புனிதமான சேவைக்காக 35 வருடங்கள் திருகோணமலையில் தமிழ்மக்களுக்காக சேவை செய்திருக்கிறார் என பலரும் அவரை நினைவுகூர்கின்றனர்.  

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version