இலங்கை
நாயை மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச்சென்ற நபர்; இலங்கையில் ஈவிரக்கமில்லா சம்பவம்!
நாயை மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச்சென்ற நபர்; இலங்கையில் ஈவிரக்கமில்லா சம்பவம்!
செல்லப்பிராணியாக வளர்த்த நாயை அடித்து, மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச்சென்ற சம்பவமொன்று கந்தளாய் – கந்தலாவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவை உண்டதாகக் கூறி குறித்த நபர் இவ்வாறு நாயை கட்டி இழுத்துச்சென்றுள்ளார்.
இதன்போது கிராமவாசிகளால் காப்பாற்றப்பட்டு நாய்க்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
நாயை தண்டித்த நபர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.