இலங்கை

பெண் அழகுக்கலை நிபுணர் போதைப்பொருளுடன் கைது

Published

on

பெண் அழகுக்கலை நிபுணர் போதைப்பொருளுடன் கைது

  கொழும்பு, மொரட்டுமுல்ல, வில்லோருவத்த பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் அழகுக்கலை நிபுணர் ஒருவர் மொரட்டுமுல்ல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுமுல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மொரட்டுமுல்ல, வில்லோருவத்த பிரதேசத்தில் உள்ள அழகுக்கலை நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Advertisement

கைதுசெய்யப்பட்டவர் மொரட்டுமுல்ல, வில்லோருவத்த பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய பெண்ணொருவர் ஆவார்.

சந்தேக நபரான பெண்ணிடமிருந்து 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேவேளை பெண்ணின் கணவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

மேலும் சம்பவம் தொடர்பில் மொரட்டுமுல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version