இலங்கை

போதைப்பொருளை வைத்திருந்த 3 இளைஞர்களுக்கு தண்டம் விதிப்பு

Published

on

போதைப்பொருளை வைத்திருந்த 3 இளைஞர்களுக்கு தண்டம் விதிப்பு

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருள், 5 கிராம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்ட மூன்று இளைஞர்களுக்கு நீதிமன்றம் தண்டம் விதித்துள்ளது.

சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.எஸ்.ராமநாயக்க, சுன்னாகம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி கெலும் சிறிமால் ஆகியோரின் தலைமையின் கீழ் செயற்படும் குழுவினரால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

சந்தேகநபர்கள் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா தண்டப் பணம் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version