இலங்கை
மாடு அறுக்கும் நிலையம் ‘சீல்’ வைக்கப்பட்டுப் பூட்டு!
மாடு அறுக்கும் நிலையம் ‘சீல்’ வைக்கப்பட்டுப் பூட்டு!
மன்னார் நகரசபை எல்லைக்குள் உள்ள மாட்டு இறைச்சி விற்பனை நிலையங்களுக்கான மாடு வெட்டும் நிலையத்துக்கு மன்னார் பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரிகள் பணிமனையால் “சீல்” வைக்கப்பட் டுள்ளது. மன்னார் பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை அதிகாரிகளுக்குக் கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் மன்னார் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையில், மாடு அறுக்கும் நிலையம் பல ஆண்டுகளாக சுகாதார நடைமுறைகளுக்கும், அரச அறிவுறுத்தல்களுக்கும் அமைய இயங்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, மாடு அறுக்கும் நிலையம் “சீல்” வைத்து மூடப்பட்டுள்ளது.