டி.வி
முத்துவின் பேச்சை மீறிய மீனா; விஜயாவை மிரட்டிய எமதர்மராஜா.! சீரியலில் திடீர் திருப்பம்!
முத்துவின் பேச்சை மீறிய மீனா; விஜயாவை மிரட்டிய எமதர்மராஜா.! சீரியலில் திடீர் திருப்பம்!
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மீனா register கல்யாணம் பண்ணலாமா இல்லையா என்று கோவிலில் சீட்டுக் குலுக்கி போட்டுப் பார்க்கிறார். அதன்போது register கல்யாணம் பண்ணலாம் என்று வருகிறது. இதனை அடுத்து மீனா சீதாவப் பாத்து நான் கும்பிடுற அம்மனே எனக்கு ஒரு பதிலை சொல்லிட்டால் register கல்யாணத்தை பண்ணிக்கலாம் என்று சொல்லுறார். அதைக் கேட்டு சீதா சந்தோசப்படுறார்.அதனை அடுத்து மீனா இப்போதைக்கு ஒரு பாதுகாப்புக்காக இதைப் பண்ணிக்கலாம் என்று சொல்லுறார். பின் சீதா அருணுக்கு போன் எடுத்து அக்கா register கல்யாணத்திற்கு ok பண்ணிட்டால் என்று சொல்லுறார். அதைக் கேட்ட அருண் இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு என்று சொல்லுறார். இதனை அடுத்து முத்து ஷூட்டிங் நடக்கிற இடத்திற்கு சவாரிக்குப் போய் நிற்கிறார். அப்ப ஒருவர் டயலொக் சொல்லாமல் நிக்கிறதைப் பாத்த முத்து தான் அந்த டயலொக்கை சொல்லுறார். பின் மீனா அருணைப் பாத்து எல்லா இடத்திலயும் நீங்களும் நல்லவராக நடந்து கொள்ளேல என்று சொல்லுறார். மேலும் நீங்கள் எவ்வளவோ தப்பு பண்ணியிருக்கீங்க உங்களை தப்பானவர் என்று என்ர புருஷன் சொல்லுறதில தப்பில்ல என்கிறார். அதைக் கேட்ட அருண் அப்ப நீங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லலயா என்று கேட்கிறார். அதுக்கு மீனா தன்ர தங்கச்சிக்காக தான் சம்மதித்தேனே தவிர எனக்கு உங்களை பிடிக்கல என்றார். இதனை அடுத்து முத்து ஷூட்டிங்கில் எமதர்ம வேடம் போட்டது போலவே விஜயா வீட்டுக்கும் வந்து நிற்கிறார். அதனைப் பார்த்து விஜயா பயத்தில் ஷாக் ஆகுறார். பின் விஜயா அந்த சாமியார் சொன்ன மாதிரியே நீங்கள் உண்மையா வந்திட்டீங்களா என்று கேட்கிறார். இதனை அடுத்து அண்ணாமலை வந்து இது எமன் எல்லாம் இல்ல முத்து தான் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.