இலங்கை

14 மாத குழந்தையின் சடலத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

Published

on

14 மாத குழந்தையின் சடலத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

ஹட்டன், ஷெனன் தோட்டத்தில், தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையால் 14 மாத ஆண் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி, குழந்தையின் உடலுடன் பொதுமக்கள் நேற்று (16)  வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஷெனன் பகுதியைச் சேர்ந்த இந்தக் குழந்தை ஜூன் 15 அன்று திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதையடுத்து, குழந்தையை தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

Advertisement

அங்கு வைத்தியர் இல்லாததால், டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தோட்ட நிர்வாகத்திடம் வாகன உதவி கோரப்பட்டுள்ளது.

எனினும், சாரதி இல்லை எனக் கூறி தோட்ட நிர்வாகம் வாகனம் வழங்க மறுத்ததால், குழந்தை தனியார் வாகனத்தில் டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

Advertisement

தோட்ட நிர்வாகத்தின் அலட்சியமே இந்த மரணத்திற்கு காரணம் எனக் குற்றம்சாட்டி, ஷெனன் தோட்ட மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதற்கிடையில், குழந்தையின் பிரேத பரிசோதனை டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்டது.

தொண்டையில் பால் புரைக்கேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டதே குழந்தையின் மரணத்திற்கு காரணம் என அறிக்கையிடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version