இலங்கை

இரத்தவாந்தியெடுத்த வயோதிபர் உயிரிழப்பு!

Published

on

இரத்தவாந்தியெடுத்த வயோதிபர் உயிரிழப்பு!

இரத்தவாந்தியெடுத்த முதியவர் ஒருவர் மேலதிக சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். நெடுந்தீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இராமநாதன் முத்துலிங்கம் (வயது-62) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

கடந்த 15ஆம் திகதி இரவுபடுக்கையில் இரத்தவாந்தி எடுத்த அவர். மறுநாள் காலையில் நெடுந்தீவு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே, சிகிச்சையின்போது உயிரிழந்துள்ளார்.

Advertisement

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version