உலகம்
ஈரான் மற்றும் இஸ்ரேலை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை!
ஈரான் மற்றும் இஸ்ரேலை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக, பல நாடுகள் தங்கள் குடிமக்களை உடனடியாக ஈரான் மற்றும் இஸ்ரேலை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளன. குறித்த பிராந்தியத்தில் மோதல் நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல் மற்றும் ஈரானின் பதில் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தப் பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமை மேலும் ஆபத்தானதாக மாறியுள்ளதுடன் மோதல்கள் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளன. அதன்படி, பல நாடுகள் தங்கள் குடிமக்களை உடனடியாக அந்தப் பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளன:
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்கவும், ஏற்கனவே அங்கு இருந்தால் உடனடியாக வெளியேறவும் அமெரிக்கா தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, ஆபத்து நிறைந்த பகுதிகளிலிருந்து விலகி இருக்கவும், உள்ளூர் பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்றவும் அவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.