சினிமா
எதிர்நீச்சல் சீரியல் நடிகை பார்வதியின் சம்பளம் இத்தனை கோடியா!! அவரே சொன்ன தகவல்..
எதிர்நீச்சல் சீரியல் நடிகை பார்வதியின் சம்பளம் இத்தனை கோடியா!! அவரே சொன்ன தகவல்..
சன் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியலில் முதல் பாகம் கடந்த நிறைவடைந்த நிலையில் ’எதிர்நீச்சல் தொடர்கிறது” தற்போது ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.சீரியலில் ஜனனியாக மதுமிதா விலகிய நிலையில், தற்போது அந்த ரோலில் நடிகையும் தொகுப்பாளினியுமான பார்வதி நடித்து வருகிறார்.சமீபத்தில் பார்வதி அளித்த பேட்டியொன்றில், சம்பளம் எவ்வளவு என்ற கேள்வி பதிலளித்துள்ளார். அதில், தொகுப்பாளினி அவரிடம் எதிர்நீச்சல் சீரியலில் சம்பளம் 1 கோடியா அல்லது 10 லட்சமா என்று கேட்கப்பட்டது.இதனால் ஷாக்கான பார்வதி, என்னங்க இப்படி பண்றீங்க, யாருங்க இதெல்லாம் சொல்றாங்க உங்களுக்கு, ஒரு கோடியா உண்மையாவா?.ஓகே ஒரு கோடின்னு தானே சொல்றாங்க, அப்படியே இருக்கட்டும் என்று காமெடியாகவும் வெளிப்படையாகவும் பேசியுள்ளார். மேலும் நான் திருமணம் செய்யப்போவதில்லை, ரியல் வாழ்க்கையில் வேண்டாம் என்று பார்வதி தெரிவித்துள்ளார்.