உலகம்
காசாவில் உதவி பெற சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு – 59 பேர் பலி!
காசாவில் உதவி பெற சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு – 59 பேர் பலி!
காசாவில் லாரிகளில் இருந்து உதவி பெற முயன்ற கூட்டத்தின் மீது இஸ்ரேலிய டாங்கிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 59 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில், தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸில் உள்ள ஒரு தெருவில் சுமார் ஒரு டஜன் சிதைந்த உடல்கள் கிடப்பதைக் காட்டியது.
அக்டோபர் 2023 முதல் காசாவில் ஹமாஸ் தலைமையிலான பாலஸ்தீன போராளிகளுடன் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய இராணுவம், அந்தப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஒப்புக்கொண்டதுடன், சம்பவம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் கூறியது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை