இலங்கை
கெஹெலிய ரம்புக்வெல்ல, மனைவி, மகளுக்கு பிணை
கெஹெலிய ரம்புக்வெல்ல, மனைவி, மகளுக்கு பிணை
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அவரது மனைவி மற்றம் மகள் ஆகிய மூவரும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று(18) மாலை ஆஜர்படுத்தப்பட்டனர்.
அந்த மூவரையும் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியிருந்தனர்.
இதன்போது அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.