சினிமா

சத்தமே இல்லாமல் 7ஆண்டுகளாக நன்கொடை செய்துவந்த நடிகர்.! யார் தெரியுமா?

Published

on

சத்தமே இல்லாமல் 7ஆண்டுகளாக நன்கொடை செய்துவந்த நடிகர்.! யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் இன்று நடிகராக மட்டுமல்லாது நல்ல மனிதராகவும் பலரது மனங்களில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். நடிப்பு, பாடல், தயாரிப்பு எனப் பல தளங்களில் கலக்கி வரும் இவர், மறைந்த நெல் ஜெயராமனின் குடும்பத்திற்காக எடுத்த பொறுப்பு குறித்து தற்போது இயக்குநர் இரா. சரவணன் சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.’நந்தன்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இரா. சரவணன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அந்த நேரத்தில், அவர் நெல் ஜெயராமன் பற்றியும், அவரது மறைவுக்கு பின் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்தும் உருக்கமாகப் பேசியிருந்தார்.அதில், “அண்ணன் நெல் ஜெயராமன் மறைந்ததும், அவரது மகனின் கல்வி செலவுகளை தாமாகவே ஏற்கிறேன் என்று கூறியவர் நடிகர் சிவகார்த்திகேயன்” என இயக்குநர் வெளியிட்ட உண்மை தகவல் தற்போது இணையத்தில் பெரும் கவனத்தை பெற்று வருகின்றது.இரா. சரவணன் மேலும், “நெல் ஜெயராமனின் மகன் சீனிவாசனின் கல்வி செலவுகள் அனைத்தையும் கடந்த 7 ஆண்டுகளாக சிவகார்த்திகேயன் முழு அக்கறையுடன் பார்த்து வருகின்றார். பணம் கட்டுவது மட்டும் அல்லாது. ஒவ்வொரு வருடமும் தேர்வு நேரத்தில் போன் எடுத்து விசாரிப்பார். அன்பும் அக்கறையும் கொண்டவர்.” எனவும் தெரிவித்திருந்தார். இதன் மூலம் சிவகார்த்திகேயனின் மனிதநேய உணர்வு ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version