சினிமா

‘சரிகமப’ Duet Round.. இனியா பாடலைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட நகுல்.! வைரலான வீடியோ..

Published

on

‘சரிகமப’ Duet Round.. இனியா பாடலைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட நகுல்.! வைரலான வீடியோ..

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘சரிகமப’ சீசன் 5 நிகழ்ச்சி, இந்தவாரம் ஒரு உணர்வுபூர்வமான இசை மேடையாக மாறியுள்ளது. ‘Duet Round’ எனும் சிறப்பு பாகமாக ஒளிபரப்பாகும் இந்த வார எபிசொட், பல்வேறு பாட்டுகளால் ரசிகர்களை நெகிழ வைக்கும் தருணங்களை உருவாக்கியுள்ளது. இதன்போது, சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அதர்வா மற்றும் நகுல் கலந்து கொண்டது நிகழ்ச்சிக்கு கூடுதல் மெருகாக அமைந்தது.போட்டியாளர்கள் அனைவரும் இந்த Duet Round-ல் தங்கள் திறமைகளை இரட்டிப்பு ஆற்றலோடு வெளிப்படுத்தியிருந்தனர். ஒவ்வொரு ஜோடியின் பாடலும், இசையின் உச்ச நிலையை தாண்டி சென்றதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் புகழ்ந்து வருகின்றனர்.Duet Round-ல் நடந்த மிக முக்கியமான நிகழ்வாக இருந்தது இனியா பாடிய “காதோரம் லோலாக்கு..” பாடல் தான். இனியாவின் பாடலுக்குப் பின், நகுல் மேடைக்கு ஓடி வந்து, இனியாவை கட்டியணைத்து கொண்டு “இவ்ளோ நல்லா பாடுவாள்னு எனக்கே தெரியல!” என நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு முக்கிய விருந்தினர் அதர்வா. தன்னுடைய அழகான ரசனையுடன் Duet Round-ல் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலையும் ரசித்ததோடு, போட்டியாளர்களை மிகுந்த அன்புடன் ஊக்குவித்தார். Duet Round பற்றிய வீடியோக்கள், குறிப்பாக இனியாவை நகுல் கட்டியணைத்து கொண்ட வீடியோ, தற்போது YouTube மற்றும் Instagram-ல் வைரலாகி வருகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version