இலங்கை

சர்வதேச வர்த்தகப் போரால் இலங்கைக்குப் பெரும் பாதிப்பு!

Published

on

சர்வதேச வர்த்தகப் போரால் இலங்கைக்குப் பெரும் பாதிப்பு!

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் சுட்டிக்காட்டு

சர்வதேச வர்த்தகப்போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதித் தொழிற்றுறை பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 59ஆவது அமர்வின் ஆரம்ப உரையிலேயே அவர் இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் அண்மைய வரிகள் தொடர்பாகவே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள மனித உரிமைகள் ஆணையாளர், வர்த்தகப் போரின் அதிர்ச்சிகள் மூன்றாம் உலக நாடுகளை சுனாமியின் வலுவோடு தாக்கும் என்றும் தெரிவித்துள்ளார். கரீபியன் நாடுகள், அபிவிருத்தி அடைந்துவரும் சிறிய தீவு நாடுகள் ஆகியவை மோசமான பாதிப்பை எதிர்கொள்ளும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இலங்கை, பங்களாதேஷ், கம்போடியா. வியட்நாம் போன்ற ஏற்றுமதி தொழிற்றுறையை அடிப்படையாகக் கொண்ட நாடுகள் பெரும் பேரழிவுப் பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version