இலங்கை

சைவநெறிக்கூடப் பெண் அருட்சுனையர் கொடியேற்றித் திருவிழா!

Published

on

சைவநெறிக்கூடப் பெண் அருட்சுனையர் கொடியேற்றித் திருவிழா!

சைவத் தமிழ்ப்பண்பாட்டில், பெண்கள் உயர்ந்தவர்களாகவும் உரிமையுடனும் பக்தியுடனும் முன்னிறைந்தவர்களாகவும் இருந்தனர். தமிழர் தொன்மைநீதிநூல்களில் பெண்களின் மீது ஏற்பட்ட பக்திநிலை அழகாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெண்கள் வகித்த சமயநெறி முக்கியத்துவம், சமுதாயத்தின் உண்மைய ஒழுக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளது. கடந்த நூற்றாண்டுகளில் தாய்மொழி வழிபாடு அற்றுப்போனதும், பெண்கள் பொறுப்புகளில் விலக்கப்பட்டதும் இருண்ட வலாற்றின் பேரிடர் காலமாகும்.

சைவநெறிக்கூடம், 1994 முதல் பக்தி மன்றமாகவும், 2009 முதல் கோவிலாகவும், 2012ம் ஆண்டு முதல் தமிழ் வழிபாட்டு ஆணை அறிவித்து, கருவறையில் தெய்வத் தமிழ் வழிபாட்டினை ஒழுகி, இன்று உலகில் தமிழ் வழிபாட்டினை அறவழிப்போராட்டமாக முன்னெடுத்து வருகிறது.

Advertisement

தமிழ்வழிபாடு

தமிழ் மொழிதான் தெய்வத் தமிழ் எனப்படும் மொழி. தெய்வ இந்தி, தெய்வ ஆங்கிலம் என்றெல்லாம் வழக்கிலில்லை. “ஓம்” என்கிற ஓங்காரத்தின் பொருளை, தமிழ்க் கடவுள் எனப்படும் முருகனுக்கும் சிவபெருமானுக்கும் கொஞ்சு தமிழால் விரித்துரைத்ததே வரலாறு.
(“கொன்றைச் சடையார்க்கு ஒன்றைத் தெரிய கொஞ்சித் தமிழால் பகர்வோனே” – திருப்புகழ்)

தெய்வம் எல்லா மொழிகளுக்கும் பொதுவானது. ஆனால் அந்தத் தெய்வம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்மொழிக்குச் சங்கம் கண்டது என்று, 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூன்றாம் தமிழ்ச் சங்க நூலான இறையனார் களவியல் உரைநூல் சான்றாக பகர்கிறது. உலகை உருவாக்கிய உயர்நிலை உயிர்களான சதாசிவர்களைப் பணிகொள்ள இறைவனால் கற்பிக்கப்பட்ட முதல்மொழி தமிழ் என்று வள்ளலார் ‚தமிழ்‘ என்ற சொல்லுக்கு எழுதிய விரிவுரையில் உறுதிப்பட உரைக்கின்றார்.

Advertisement

“முத்தியை, ஞானத்தை, முத்தமிழ் ஓசையை” என இறைவனே முத்தமிழ் ஓசையாக உள்ளவன் என அடையாளம் காட்டுகின்றார் திருமூலர் — தமிழ் மூவாயிரமாம் திருமந்திரத்தில். கோயில்கள் எல்லாம் தமிழர் கண்டவை. தமிழ்நாட்டில் உள்ள 1008 சிவாலயங்களும், 108 வைணவத் தலங்களும் இதற்குச் சான்று. தமிழகத்தைத் தாண்டினால் இந்தியாவில் சொல்லும் தரத்தில் பெரிய கோயில்கள் ஏதும் இல்லாததும் இதை உறுதிப்படுத்தும்.

வடக்கே கைலாயத்தில் உள்ளதாகக் கூறப்படும் சிவபெருமான் தெற்கே தமிழ்நாட்டைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். தமிழின் இனிமையும் தமிழிசையின் இனிமையும் ஆகியவற்றிற்காக ஏங்கி, இறைவன் தெற்கே தில்லைக்கு வந்து கூத்தாடினானாம். ஆடும்போது களைப்பு தீர இடையிடையே தென்றலின் சுகமும் பெறலாம் எனத் தெற்கிற்கு வந்ததாக திருவிளையாடற் புராணம் கூறுகிறது.

தமிழ்நாட்டைத் தாண்டி வடக்கே நடராசருக்குக் கோயில் கிடையாது. தென்னாட்டில் தான் சைவம் உருவானதாக ‘காரண ஆகமம்’ கூறுகிறது. எனவே “சிவன் தென்னாடுடைய சிவனானான்.” தமிழ்நாட்டு கோயில்களில் கி.பி. 7ஆம் நூற்றாண்டு வரை தமிழில்தான் வழிபாடுகள் நடந்தன என்று திருஞான சம்பந்தர் பல பாடல்களில் பதிவு செய்திருக்கிறார்.
(உ-ம்: “செந்தமிழர் தெய்வமறை நாவர்”, “ஊறும் இன்தமிழால் உயர்ந்தார் தொழுதேத்தும் தில்லை”)

Advertisement

பெண்ணின் பெருமை

“மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டுமம்மா” என பாடும் பொருள் போல, பெண்கள் நல்வினையும் இறைபக்தியுமே சமூகத்தை உயர்த்தும் கருப்பொருள் என்பது தமிழர்பண்பாடு ஆகும்.

சைவ நாயன்மார்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஆழ்ந்த ஆன்மீகப் பயணத்தை வெளிப்படுத்தியவர் பெண்ணரசி காரைக்கால் அம்மையார் ஆவார்கள். தமிழ்நாட்டில் காரைக்காலில் ஒரு இறைவணிகரின் மனைவியாகப் பிறந்தவர். சிவபக்தியில் ஆழ்ந்தவர். சிவபெருமானிடம் “மனித அழகையும் வாழ்க்கையையும் துறக்க விரும்புகிறேன்” என வேண்டி, எலும்புச் சிதிலமான உருவம் ஏற்றுத், எம் பெருமானால் “அம்மை” என அழைக்கப்பட்ட பெண் அரசி காரைக்கால் அம்மை ஆவார்கள். அம்மையாரின் பாடல்கள் அறிவும் (ஞானமும்) பக்தியும் கலந்தவை. “அர்ப்புதத்திற் பக்திப் பாட்டு” என அழைக்கப்படும் இவை, சிவபெருமானின் அருளையும், உலக விலகலையும் சுட்டிக்காட்டுகின்றன:

Advertisement

அருள்செய்வாய் என்னை அண்டர்க்கு அரியாய்
மருள்செய்வாய் என்று உன்னைத்தன்னை
உருள்செய்தாள் உற்றேன் ஒடுங்கிட ஒடுங்கிட
இருள்செய்தாய் என் உயிர்க்கேளே.
— காரைக்கால் அம்மையார்

முதற் பெண் சைவ நாயன்மார், பக்தியின் பரமநிலையை அடைந்தவர், தன்னை ‘பேய்ப் போல’ மாற்றிக்கொண்டாலும் சிவனடிக்கு பக்தியில் நிலைத்தவர், தாளமிட்டு நடனம் ஆடிய பெண் நாயன்மார். ஆகவே, சைவ சமயம் பெண்களை விலக்கி வைப்பது அல்ல, அடக்கியும் வைத்ததில்லை.

கொடியேற்றம்

Advertisement

முதன்முறையாக, சுவிற்சர்லாந்தில் வலே மாநிலத்தில் மர்த்தினி நகரில் அமைந்திருக்கும் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் இவ்வுலகநிறைவு ஆண்டுக்கான பெருந்திருவிழாவில், தலைமை அருட்சுனையராக ஒரு பெண் தெரிவுசெய்யப்பட்டு வரலாறு மீளமிளிர்கிறது.

15.06.2025, மர்த்தினியில் திருக்கொடியேற்றத்தினை செந்தமிழ் பெண் அருட்சுனையர் திருநிறை, சைவசீர்நெறிச் சிவத்திருமகள் உசாணி பகீரதன் ஆற்றிவைத்துள்ளார். எதிர்வரும் 24.06.2025 வரை திருவிழாக் காலத் தலைமை அருட்சுனையராக பெண் திருச்சடங்குகள் ஆற்றுவது, தமிழ் வழிபாட்டின் முன்னெடுப்பில் ஒரு தொலைகல் பயணம் கடந்து சிறந்து செல்வதாக அடியவர்கள் மகிழ்கின்றனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version