இலங்கை
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சூழலை அரசாங்கம் உருவாக்க வேண்டும்; சாணக்கியன் தெரிவிப்பு!
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சூழலை அரசாங்கம் உருவாக்க வேண்டும்; சாணக்கியன் தெரிவிப்பு!
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான சூழலை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றும் தேர்தல் நடத்தும் திகதியை அரசாங்கம் உறுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பான பிரேரணையில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கு தமிழரசுக் கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் எனவும், மாகாண சபை தேர்தல் தொடர்பான தமது பிரேரணையை அரசாங்கம் ஆளும் தரப்பு பிரேரணையாகக் கருதி, சட்டத் திருத்தத்தை விரைவாக மேற்கொண்டு தேர்தலை விரைவாக நடத்தும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.