சினிமா
மிஷ்கினுக்கு வாய்ப்பு கொடுத்ததே நான் தான்; ஆனா அவருக்கு என்ர படங்கள் பிடிக்கல! – சேரன்
மிஷ்கினுக்கு வாய்ப்பு கொடுத்ததே நான் தான்; ஆனா அவருக்கு என்ர படங்கள் பிடிக்கல! – சேரன்
தமிழ் சினிமாவில் உணர்வுபூர்வமான படங்கள், குடும்பக் கதைகள், மனதின் ஆழங்களைத் தொடும் கதைகளை இயக்கியவர் தான் சேரன். சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட அவர், தனது திரைப்படப் பயணத்தையும், மிஸ்கின் உடன் ஏற்பட்ட சில மறக்க முடியாத அனுபவங்களையும் பகிர்ந்திருந்தார்.நேர்காணலின் போது, மிஸ்கின் இயக்கிய ‘யுத்தம் செய்’ திரைப்படம் குறித்து பேசும்போது, அதற்கான வாய்ப்பு எப்படி உருவானது என்பதைச் சேரன் விளக்கினார்.”AGS இல் டைரக்டராக ஒரு படம் பண்ணுறதுக்கு அக்ரிமெண்ட் போட்டுட்டேன் அப்ப தான் அந்த தயாரிப்பாளர் மிஸ்கின் சார் சொன்ன ஒரு கதையை சொன்னாரு அது கூட உங்களுக்கு பிரமாதமாக பொருந்தும் நீங்கள் நடிக்கிறீங்களா என்று கேட்டார். அப்போ நாம நடிக்கலாம் என்று நானே தான் மிஷ்கினைக் கூப்பிட்டு , சம்பளத்தைக் கூட குறைச்சுக்கிட்டு அவருடைய டைரக்ஷனில் நடிக்கணும் என்று அதில் நடித்தேன்.” என்றார் சேரன்.மேலும், மிஸ்கின் தன்னைப் பற்றி பிற இடங்களில் அளிக்கும் கருத்துகள் குறித்து கேட்கப்பட்டபோது, சேரன் சிரிப்புடன் பதிலளித்தார். “மிஸ்கின் சார் எங்கயாவது பேசும் போது, நான் சேரன் சார் படத்தைப் பார்த்தா தூங்கிடுவேன் என்பார். அது எனக்குச் சிரிப்பா தான் இருக்கும். சரி, ஓகே. அவருக்கு என் படம் பிடிக்கலன்னா பரவாயில்லை. ஆனா எனக்கு அவரோட படங்கள் பிடிக்கும்.” என்று மனம் திறந்தார்.சேரனின் இந்த கருத்துகள் வெளியாகியவுடன், திரையுலகத்தில் மிஸ்கின் மற்றும் சேரனுக்கு இடையே என்ன பிரச்சனை.? என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், சேரனின் வார்த்தைகள் எந்தவொரு பகைமையையும் வெளிக்காட்டவில்லை. மாறாக, மற்றவர்களின் கலைப்படைப்பை மதிக்கிறார் என்பதனை இந்த நேர்காணல் உணர்த்துகிறது.