இலங்கை

யாழ்ப்பாணம் – பலாலி வீதியை இரவு 7 மணி வரையில் திறக்க பணிப்பு!

Published

on

யாழ்ப்பாணம் – பலாலி வீதியை இரவு 7 மணி வரையில் திறக்க பணிப்பு!

யாழ்ப்பாணம்- பலாலி வீதி போக்குவரத்திற்காக இரவு ஏழு மணி வரை திறக்கப்பட்டு இருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைப்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் கூட்டத்தில் தான் கலந்து கொண்டிருந்தவேளை, ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த வீதி இரவு 7 மணி வரையில் திறந்திருக்கும் என தெரிவித்தார்.

Advertisement

யாழ்ப்பாணம் பலாலி வீதியானது வசாவிளான் சந்தியில் இருந்து பருத்தித்துறை – பொன்னாலை வீதி வரையிலான சுமார் 2 கிலோமீற்றர் தூரம் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த வீதியானது காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மக்களின் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில் குறித்த வீதியின் ஊடாக வேலைகளுக்கு சென்று வருபவர்கள் மாலை 5 மணிக்கு பாதை பூட்டப்படுவதால் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் மாற்று பாதை ஊடாக பயணித்து வந்தனர். இந்நிலையிலையே ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் கூட்டத்தில் வேலைக்கு போய் வருவோரின் நலன் கருத்து வீதியினை இரவு 7 மணி வரைக்கும் திறக்குமாறு கோரிக்கையை முன்வைக்கப்பட்ட நிலையில், அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி குறித்த வீதியினை இரவு 7 மணி வரையில் திறக்குமாறு இராணுவத்தினருக்கு பணித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version