இலங்கை

60 இற்கும் மேற்பட்ட படுகொலைகளுக்கு டக்ளஸ் உடந்தை (வீடியோ இணைப்பு)

Published

on

60 இற்கும் மேற்பட்ட படுகொலைகளுக்கு டக்ளஸ் உடந்தை (வீடியோ இணைப்பு)

மண்டைதீவில் இடம்பெற்ற மனித படுகொலைகளுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவும் உடந்தையாக இருந்துள்ளார் என பாராளுமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், டக்ளஸிடமும் விசாரணைகளை நடத்தவேண்டும் என்றும் கோரினார். 

ஆண்டு யாழ்ப்பாணத்தின் மண்டைதீவு, அல்லைப்பிட்டி மற்றும் மண்கும்பான் பகுதிகளிலிருந்து இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட எண்பதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் காணாமலாக்கப்பட்டமை தொடர்பிலும், மண்டைதீவு செம்பாட்டுத் தோட்டம் புனித தோமையார் தேவாலய வளாகத்தில் இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழியுடன் தொடர்புடைய கொலைகள் பற்றியும், இலங்கை இராணுவத்தின் துணை ஆயுதக் குழுவான ஈ.பி.டீ.பியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவை விசாரணை செய்ய வெண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version